புள்ளிவிபரங்கள்
மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி :
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய 56 மாணவர்களில் 19 மாணவ மாணவிகள் மதிப்பெண்கள் 400 க்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர் .
- மேலும் கணிதத்தில் 5 மாணவ மாணவிகள்
- அறிவியலில் ஒரு மாணவியும் 100க்கு 100மதிப்பெண்கள்
பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் பயின்ற 5 மாணவிகள் மருத்துவ துறையிலும் மற்றும் அநேக மாணவ மாணவிகள் பொறியியல் துறையிலும் பட்டம் பெற்றுள்ளனர் .
கல்வி மாவட்ட அளவிலான பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் அண்மையில் பாராட்டப்பட்டனர். ஒரத்தநாட்டில் அண்மையில் நடைபெற்ற பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான சீனியர் மகளிர் பூப்பந்து இறுதிப் போட்டியில் மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். இதையொட்டி, வெற்றி பெற்ற மாணவிகள்
வே. கவிநிலா, க. மோகனப்பிரியா, பெ. தர்மக்கனி, ம. சுமித்ரா, செ. ரத்னப்பிரியா, அ. அபிநயா, இரா. வினோதா, சு. அனிதா, பயிற்சியளித்த உடல் கல்வி ஆசிரியர் தி. பெஞ்சமின் கார்மென்
ஆகியோரை மூத்தாக்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் வி. சின்னக்கண்ணு, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கருணாகரன், தலைமை ஆசிரியர் வே. மாரியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
-------- கடத்த செப்டம்பர் 23 அன்று தினமணி நாளிதழில் மற்றும் தினமணி இணையதளத்திலும் இந்த தகவல் வெளியானது .
அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி. |
|